சு.வெங்கடேசன்

மதுரை: தமிழகத்தில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க மத்திய அரசு 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது மிகவும் குறைவான ஒதுக்கீடு என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் நாட்டின் மதுரையைத் தவிர மற்ற வட இந்திய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டு விட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை: மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் கேட்கவில்லை என்றும் தமிழகத்துக்குரிய உரிமையைத் தர வேண்டும் என்றுதான் கேட்கிறோர் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பயணம் மேற்கொண்ட இண்டிகோ உள்நாட்டு விமானத்தில் “இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பக்கம்” ஏரி என்று தமிழில் ஒரு குரல் ஒலித்தது. அது குறித்து பாராட்டி அவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.